அருள்மிகு திரௌபதையம்மன் கோவில்,
தோப்புத்துறை
கொடியேற்றம் (த்வஜரோஹனம்) நிகழ்ச்சி.
தோப்புத்துறை
கொடியேற்றம் (த்வஜரோஹனம்) நிகழ்ச்சி.
தோப்புத்துறை அருள்மிகு திரௌபதையம்மன் கோவில் வருடாந்திர தீமிதி திருவிழா இவ்வருடம் 21-07-2011 அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர்வரும் 08 -08 - 2011 திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு திரௌபதை படுகளம் மற்றும் கூந்தல் முடிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பகல் 11 மணிக்கு வேண்டுதல் அன்னதான குழு ஏற்பாடு செய்துள்ள பகல் முழு உணவு வரும் பக்தர்களுக்கு பரிமாறபடுகிறது. மாலை ஆறு மணிக்கு அம்மன் புறப்பாடாகி கிழக்கு ஆற்றான் கரைக்கு எழுந்தருளி, பக்தர்கள் தீமிதிக்கும் வைபவம் வெகுசிறப்பாக நடைபெறும். இரவு ஒன்பது மணிக்கு "முல்லை நடவரசு " அவர்கள் தலைமையில் பட்டிமன்றமும் நடை பெற உள்ளது. இதை காணும் வெளியூரில் வசிக்கும் நமதூர் பெருமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து விழாவினை சிறப்பித்து அம்மனின் அருள் பெற அன்போடு அழைத்து மகிழ்கிறோம். நன்றி வருக! அம்மனின் அருள் பெருக!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக