சனி, 12 பிப்ரவரி, 2011

thopputhurai sevaikarangal


 உ

  சேவைக் கரங்கள்  
(தோப்புத்துறை வாழும்கலை குடும்பம் )


           தோப்புத்துறை சேவை கரங்கள் என்ற மன்றம் பொது நல நோக்கில் அமைக்க பட்டது . இந்த அமைப்பானது தோப்புத்துறையில் வாழும்கலை பயிற்சி பெற்ற சிலரால் நடத்தப் படுவதாகும். இம்மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தஊருக்கு  நற்பணிகளை செய்து வருகின்றோம். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு வருடமும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக "பொங்கல் விழா" நடத்தி வருகிறோம். இந்த வருடமும் எப்போதும் போல் 16-01 -2011  அன்று மகளிருக்கான பிரமாண்ட கோல போட்டி நடத்த பட்டது. மகளிருக்கான இசை நாற்காலி, மகளிருக்கான பாட்டு போட்டி,  கும்மி பாடல்கள், குழந்தைகளுக்காக ஓவியப்போட்டி, பேச்சுப்  போட்டி,  கட்டுரைப் போட்டி,  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, சிறுவர்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயம், பலூன் உடைத்தல் மற்றும் பல போட்டிகள் நடத்த பட்டன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக  குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் இறுதியாக பாரத கதா விற்பன்னரும் நாட்டுப்புற இசைவாணருமான திரு. மதிவாணன் அவர்களின் நாட்டுபுற தெம்மாங்கு பாடல்களுடன் விழா இனிதே நிறைவேறியது.  இவ் விழாக்களை எங்களின் ஒருங்கினைப்பாளர் திரு.அரங்க.சின்னதுரை(ஓய்வு பெற்ற அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்)  மற்றும் S . வைத்யநாதன்( தலைமை ஆசிரியர் ஸ்ரீ தாயுமாணவர் வித்யாலயம், வேதாரணியம்) சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
மேலும் செய்த நற்பணிகள் மற்றும் இவ்வூரை பற்றி தகவல்கள் அடுத்த இடுகையில்.
நன்றி
 By

K.பாலகிருஷ்ணன்(LIC)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
உறுப்பினர்கள் : வை. சுப்பிரமணியன், K.பாலகிருஷ்ணன்(LIC), V.வைத்தியநாதன், P.செல்வராஜூ, M.V.வெங்கடேஷ், A.S.சேதுபதி,S.நாகராஜன்,V. பழனி மேஸ்திரி, V.முருகராசு,
Dr. B.மணிகண்டன் , M.ராஜன், K.R. அருண்,  V.மூர்த்தி பத்தர், K. பழனிபத்தர், K.செல்வராஜ் ஐயர், K.பரமசிவம், M.K.வெற்றிவேல்,S.அன்பழகன்  மற்றும் மின்சார நண்பர்கள்.

Message Body

http://www.equitycarolinas.com/images/sendinvitetoyourfriend2.htm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக